Thursday, October 05, 2006

முரண்பாடுகள்

ஒருப்பக்கம்
தகவல் தொடர்புத்துறையில்
பெரும்புரட்சி
மறுபக்கம்
விவசாயிகளின் தற்கொலை
வறுமை,வறட்சி...

அணு ஆயுதத் தொழில்நுட்பத்தில்
சரித்திரம் படைக்கும்
வல்லரசு
கண்ணுக்குத் தெரியாத
வறுமைக்கோட்டை அழிக்க முடியாமல்
தவிக்கிறதே
இந்த குடியரசு

நாட்டின்
அன்னிய செலவாணியோ
பலகோடி
நடைப்பாதையில்
வாழ்பவர்களும்
இருக்கிறார்கள்
சிலகோடி

எல்லையில்
எதிரியை நோக்கி
தினமும் கேட்கும்
சிங்கத்தின் கர்ஜனை
உள்நாட்டிலோ
மாநிலங்களுக்கிடையே
நதிநீர்ப் பிரச்சினை

ஆம்
முரண்பாடுகளின்
மொத்த உருவம்தான்
என் இந்தியத் திருநாடு
ஆயினும்
நாட்டை நேசிப்பதில்
நாங்கள் முரண்படுவதில்லை...

எனக்குள் பாரதி

தெருவோர பிச்சைகாரர்களை
காணும்பொழுது...
வேலை செல்லும் சிறார்களை
காணும்பொழுது...
சாதித்தலைவர்களின் அறிக்கைகளை
படிக்கும்பொழுது...
ஒழுக்கம் கெட்டவர்களை
சந்திக்கும்பொழுது...
சோம்பேறிகளை
காணும்பொழுது...
பெண்களை துன்புறுத்துபவரை
காணும்பொழுது...
நாட்டுப்பற்று இல்லாரை
காணும்பொழுது...

நானும் பாரதியாவேன்