Monday, July 17, 2006

இறைவனிடம் ஓரு கேள்வி

பூவிற்குள்
நறுமணத்தை
புதைத்து வைத்தாய்

மண்ணுக்குள்
வளத்தை
நிறைத்து வைத்தாய்

கற்களுக்குள்
கலையை
ஒளித்து வைத்தாய்

மேகங்களில்
மழையை
உறைத்து வைத்தாய்

நெருப்பினுள்
வெப்பத்தை
உருக்கி வைத்தாய்

காலச்சக்கரத்தினுள்
காவியங்களை
படைத்து வைத்தாய்

ஓசைகளில்
மொழிகளை
பரப்பி வைத்தாய்

கதிரவனுக்குள்
பிரபஞ்சத்தை
அடக்கி வைத்தாய்

அணுவிற்குள்
சக்தியை
அடைத்து வைத்தாய்

இத்தனையும்
வைத்த என் இறைவா!
மனிதனுக்குள்
மட்டும் ஏன்
மனிதத்தை வைக்க
மறந்து வைத்தாய்?

0 Comments:

Post a Comment

<< Home