Thursday, August 24, 2006

உன் விழிகள்....

மௌனமெனும்
தேவமொழியின்
எழுத்து வடிவம்தான்
உன் விழிகளோ!

Tuesday, August 22, 2006

மோகம்

உள்ளமெனும்
பால் குடத்தில்
ஒருதுளி நஞ்சாய்
மோகம்

மெல்ல அது
ரத்தநாளங்களில்
பரவ
எனது யாக்கை
எனக்கே எதிரியானது

மோகத்தை கொன்றுவிடு
அல்லல் எந்தன்
மூச்சை நிறுத்திவிடு என
பாரதி வேண்டியதின்
ரகசியம் புரிந்தது