Monday, July 17, 2006

பிறவி அகதி

யாழ்ப்பாணம்...
நடுநிசி நேரம்...
அவளுக்கோ நிறைமாதம்...

குண்டுவீச்சில் இறந்த
கணவன் நினைவால்
கண்ணோரம் ஈரம்...

கையில் இருந்ததெல்லாம்
கொடுத்து விசைப்படகேறினாள்.

வைகறையில்
இந்திய எல்லையில்
ஒரு மணற்திட்டில்...

விடிந்ததும்
இந்திய கடற்படை
உதவியுடன்
மண்டபம் அகதிகள் முகாமில்...

அங்கேசுகப்பிரசவம்...
பெற்றெடுத்தாள்
ஒரு அழகியஆண்பிள்ளையை
பிறக்கும்போதே அகதியாய்...

ஈன்றப்பொழுதே
துடிதுடித்தாள்
தன் மகனை
அகதி எனக் கேட்டத்தாய்...

0 Comments:

Post a Comment

<< Home