Monday, July 17, 2006

நிலவும் நானும்

அமாவாசை
வானமாய்
இருந்தேனடி நான்

உன் காதலால்
வளர்பிறையானேன்

நிறைமதியாய்
நிறைவு பெறுவது
எப்போது?

அதுவரை
உள்ளங்கையில்
உள்ளத்தை தாங்கி
உனக்காக
காத்திருப்பேன்

0 Comments:

Post a Comment

<< Home