Monday, July 17, 2006

வறுமை

தாய்க் கொடுத்த
அன்புசெல்வம்

தந்தைக் கொடுத்த
அறிவுசெல்வம்

குருக் கொடுத்த
கல்விசெல்வம்

இயற்கை கொடுத்த
வளமான செல்வங்கள்

இவற்றையும் மீறி
இந்த திருநாட்டில் வறுமை

ஊழ்வினை உறுத்து
வந்து ஊட்டியதல்ல

இங்குள்ளவர் மனவினை
உறுத்தாததால் வந்தது

பொதுவுடமை என்று
தத்துவம் பேசி
பொதுமக்கள் உடைமைகளை
தம்முடைமையாக்கிய
மனிதப்பதர்கள் தந்தது

விதைப்போம்
வளர்ச்சி விதைகளை
வேரறுப்போம்
ஊழல் களைகளை!

நிச்சயம் ஒருநாள்
இந்த தேசம்
செல்வத்திளைத்திருக்கும்..

0 Comments:

Post a Comment

<< Home